21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 267
28/05/2024 செவ்வாய்
வேள்வி
————
உயிரை எடுப்பதும் வேள்வி!
உணர்வை அழிப்பதும் வேள்வி!
பயிரைக் கெடுப்பதும் வேள்வி!
பாரினில் எங்கில்லை வேள்வி!
இயற்கை செய்திடும் அனர்த்தம்,
இதனால் வரும்மன அழுத்தம்!
செயற்கையில் வந்திடும் அழிவு,
சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு!
உயர்ந்து வந்திட்ட பேரலைகள்!
ஊரினுள் சென்ற சில நொடிகள்!
கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்!
காலம் மறந்திடாப் பெரு வலிகள்!
அறுபதில் இருந்து கண்ட பேறு!
அங்கே ஓடுது நம்குருதி ஆறு!
வெறுமின அரசியல் பூசுது சேறு!
வேள்வி தானங்கு நடக்குது பாரு!
உலகெங்கும் நடக்குது வேள்வி!
உள்ளத்தில் ஏனென்று கேள்வி!
கலகங்கள், தாங்காது இப்பூமி!
காலங்கள் சொல்லுமா நற்சேதி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...