06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 213
07/03/2023 செவ்வாய்
“நாதம்”
———-
கோவில் மணி நாதம்-அது
குடிகளுக்கு என்றும் வேதம்!
பூவில் வண்டின் நாதம்-அது
புரியாத இனிமை கோலம்!
அவன் ஆடிடும் நாதம்-அது
ஆனந்த உச்சத்தின் வேதம்!
இவண் இல்லை பேதம்-என்றும்
இணையிலா நாத கானம்!
கானத்தில் பிறந்த நாதம்-அதில்
காலத்தால் வாராது சேதம்!
மோனத்தில் ஆடும் பாதம்-அது
மோதல் இல்லாத ஞானம்!
நாதஸ்வரம் ஓர் ஞானம்-அதில்
நமக்குள் இல்லை பேதம்!
வேத உச்சாடன நாதம்-அது
விண்வரை சென்று மீளும்!
தந்திகள் தரும் நாதம்-அது
தானாக உயிரை மீட்டும்!
அந்தியில் வீசும் காற்று-அது
ஆன்மாவை வருடும் நாதம்!
இருபக்க அடிதாங்கும் மேளம்-அதன்
இணைவில் இசைந்திடும் நாதம்!
தருவிக்கும் இன்பமுதிர் தாளம்-அது
தந்திடும் இணையிலா நாதம்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...