மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:285
05/11/2024 செவ்வாய்
அழியாத கோலங்கள்
——————————-
மின்னலுடன் இடி மழையும்
மேகமே அதிரும் நிலையும்
சன்னம் பறந்திடும் ஒலியும்
சாவா வாழ்வா எனும் வலியும்!

கன்னை கன்னையாய் பிரிந்து
கயவருடன் போரிட்டு முடிந்து
பின்னை தம்மிடை போரிட்டு
புறணி சொல்லி மண்டியிட..!

தென்னை பனைதனை விட்டு,
தெற்கு வடக்காய் புறப்பட்டு..
தன்னை, தன்னுள்ளே ஒறுத்து,
தானியங்கி யந்திரமாய் கறுத்து.!

இந்திரலோக வாழ்வு கண்டும்,
இன்றும், தான் பிறந்த மண்ணும்..
சுந்தரனாய் பாதுகாத்த கண்ணும்
சுகமாய் வாழவேண்டி எண்ணும்..!

பந்தமிகு பாசமுயிர் வாழும்வரை
பரந்தமன நல்லவர் உள்ளவரை,
அந்தமென ஒன்று இல்லாதவரை..
அழியா,நாம் இட்ட கோலங்கள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading