22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 203
06/12/2022 செவ்வாய்
“மார்கழி”
*******
பொங்கல் தரும் எங்கள்
புதிய “தை” மகளுக்கு
திங்கள் ஒன்று மூத்தவளே
திரு வுருவே மார்கழியே!
கார்முகில் நிறத்தவளே
காரிகையே மார்கழியே!
தார்மீகக் குணத்தவளே
தாரகையே, தாரணியே!
சிந்தும் மழைத் துளியில்
சிலிசிலிர்த்து நின்றவளே!
எங்கும் ஒரே பச்சையென
எழில் உருவாய் ஆனவளே!
ஆதிரைப் பெரு விழாவும்
ஆண்டவர் ஜேசு பிறப்பும்
சீதனமாய் எமக் கீந்தாய்
சீர் பெண்ணே நீ வாழ்க!
ஊர் எங்கும் முற்றத்தில்
உல கறியக் கோலங்கள்
கார் விலகி விடு முன்னர்
காணும் பெரும் விருந்து!
ஏர் ஓட்டும் வயலெங்கும்
நீர் நிறைந்து நிற்கையிலே
கார் கொணர்ந்த மீனினமும்
கபடி விளை யாடு மங்கே!
அட்டையும், கொடும் பாம்பும்
அடங்காக் குரல் தவளையும்
கொட்டும் பெரும் தேள்களும்
கோலோச்ச ஏன் விட்டாய்?
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...