10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 164
01/03/2022 செவ்வாய்
“என்னாள் தானென்றாள்!”
அந்நாள் என் வாழ்வில்
-அரியவோர் பொன்னாள்!
அன்றுதான் முதன்முதல்
-என்வீடு வந்தாள்
என்னாள் தானெனச்
-எழிலாகச் சொன்னாள்
“எமக்குள் இடைவெளி
-இனியேது என்றாள்!”
கண்ணால் தூரக்கதை
-சொன்ன கன்னியவள்
காதில் கதைசொல்ல
-என்னருகே வந்தாள்
மண்ணிலும் பொன்னிலும்
-சுகமேது என்றாள்
மனைவியாய் வாழ்வதே
-மேலான தென்றாள்!
உற்றவள் நானின்று
-உம்மருகே இருக்க
உமது கவலையெலாம்
-உருகிவிடும் என்றாள்
கற்றவளாய் என்னைக்
-காமுறவும் வைத்தாள்
காணாத இன்பத்தால்
-களிப்படைய வைத்தாள்!
என்னவள் ஈந்தாள்
-எமக்கிரு செல்வங்கள்
என்துணையாய் எதிலும்
-அவளே இருப்பாள்
அன்னவள் அருகிருக்க
-ஏதுகுறை அவனியில்
ஆண்டவன் அருளுண்டு
-எங்களுக்கு பூமியில்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...