20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 164
01/03/2022 செவ்வாய்
“என்னாள் தானென்றாள்!”
அந்நாள் என் வாழ்வில்
-அரியவோர் பொன்னாள்!
அன்றுதான் முதன்முதல்
-என்வீடு வந்தாள்
என்னாள் தானெனச்
-எழிலாகச் சொன்னாள்
“எமக்குள் இடைவெளி
-இனியேது என்றாள்!”
கண்ணால் தூரக்கதை
-சொன்ன கன்னியவள்
காதில் கதைசொல்ல
-என்னருகே வந்தாள்
மண்ணிலும் பொன்னிலும்
-சுகமேது என்றாள்
மனைவியாய் வாழ்வதே
-மேலான தென்றாள்!
உற்றவள் நானின்று
-உம்மருகே இருக்க
உமது கவலையெலாம்
-உருகிவிடும் என்றாள்
கற்றவளாய் என்னைக்
-காமுறவும் வைத்தாள்
காணாத இன்பத்தால்
-களிப்படைய வைத்தாள்!
என்னவள் ஈந்தாள்
-எமக்கிரு செல்வங்கள்
என்துணையாய் எதிலும்
-அவளே இருப்பாள்
அன்னவள் அருகிருக்க
-ஏதுகுறை அவனியில்
ஆண்டவன் அருளுண்டு
-எங்களுக்கு பூமியில்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...