21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 169
05/04/2022 செவ்வாய்
“பட்டினி”
————
எண்ண மனம் நோகிறது
இதயமே வலிக்கிறது!
கண்ணருவி பெருக்கெடுத்து
கன்னத்தால் வழிகிறது!
வானும் பொய்த்துப் போக!
வயலும் வரண்டு வெடிக்க!
தானமும் தளர்ந்து போக!
தானே வரும் பட்டினி கூட!
தசையற்ற எலும்புக்கூடுகளை
தராசில் வைத்து நிறுக்கும்
தாங்கொணாக் காட்சிகளை
தரிசிக்கும் நிலையில் நாம்!
மனத்தைக் கல்லாக்கியே மக்கள்
மாண்புறு மனைகளை விற்றிடவும்!
சினத்தால் சீறியெழும் சில மனிதர்
சிறு நீரகங்களையே விற்றிடவும்!
பெற்ற குழந்தையொன்றை விற்று
பின்னுள்ள குழந்தைகளின் பசிபோக்க
அற்ற நிலைக்கும் தள்ளும் பட்டினி
அழித்துவிடும் மனித மாண்பை!
பாடுபட்டு உழைக்கும் குடும்பம்
பாங்காக வாழப் படும்பாடும்
கூடுகட்டி வாழும் சீரான வாழ்வும்
குலைந்துபோம் பட்டினி வந்திட்டால்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...