19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 170
12/04/2022 செவ்வாய்
“அல்லாடும் எம் அரும் நாடு”
———————————
அழகு மிகுந்த நம் நாடு
அன்பால் இணைந்த ஒர் கூடு
பழகு தமிழும் சிங்களமும்
பாங்குடன் உலவிய நல் வீடு!
அரசியல் புகுந்து விளையாடி
ஆணவம் மிகவும் தலைக்கேறி
உரசல் களையே உண்டாக்கி
உள்ளங்களை மாற்றி கல்லாகி!
உணர்வுகள் எல்லை மீறியதால்
உயிர்கள் போயின ஆயிரமாய்
கனவுகள் யாவும் கருகியதால்
கழிந்தது காலம் கண்ணீரில்!
“தாமே” என்ற நினைப்பதனால்
தப்புக் கணக்கும்போட்டதனால்
நாடே இன்று நடுத் தெருவில்
நாயாய் அலையுது நம்முன்னால்!
விளக்கு ஏற்றவும் நெய்யில்லை
விடிந்தால் சமைக்க வாயு இல்லை
தலைக்கு மேலே கடன் தொல்லை
தாண்டி விட்டதே தன் எல்லை!
வயிற்றில் இன்று விழுகுதடி
வாயும் அதனால் திறக்கிறதடி
கயிற்றில் நடக்கும் காலமடி
காலம் கனிந்தால் நல்லதடி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...