கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 170
12/04/2022 செவ்வாய்
“அல்லாடும் எம் அரும் நாடு”
———————————
அழகு மிகுந்த நம் நாடு
அன்பால் இணைந்த ஒர் கூடு
பழகு தமிழும் சிங்களமும்
பாங்குடன் உலவிய நல் வீடு!

அரசியல் புகுந்து விளையாடி
ஆணவம் மிகவும் தலைக்கேறி
உரசல் களையே உண்டாக்கி
உள்ளங்களை மாற்றி கல்லாகி!

உணர்வுகள் எல்லை மீறியதால்
உயிர்கள் போயின ஆயிரமாய்
கனவுகள் யாவும் கருகியதால்
கழிந்தது காலம் கண்ணீரில்!

“தாமே” என்ற நினைப்பதனால்
தப்புக் கணக்கும்போட்டதனால்
நாடே இன்று நடுத் தெருவில்
நாயாய் அலையுது நம்முன்னால்!

விளக்கு ஏற்றவும் நெய்யில்லை
விடிந்தால் சமைக்க வாயு இல்லை
தலைக்கு மேலே கடன் தொல்லை
தாண்டி விட்டதே தன் எல்லை!

வயிற்றில் இன்று விழுகுதடி
வாயும் அதனால் திறக்கிறதடி
கயிற்றில் நடக்கும் காலமடி
காலம் கனிந்தால் நல்லதடி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan