தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 174
10/05/2022 செவ்வாய்
“வளம் தரும் வாழை”
————————
வாழையிலே பல்வேறு இனமுண்டு
வகைகளின் எண்ணிக்கை பலவுண்டு
ஏழையின் வீட்டிலும் இதுவுண்டு
எங்கும் காணுமின்ற மரமொன்று!

கதலியும் இதரையும் பன்றியும்
கன்னல் சுவைதரும் கப்பலும்
இதந்தரு இதரையும் மொந்தனும்
இனோரன்ன பிற இன வகையும்!

விரதத்திற்கு வேண்டும் வாழையிலை
வீட்டில் விருந்திற்கும் இதே இலை
பருவ பண்டிகைக்கு பயன்படும் இலை
படைப்பதற்கும் கிடைக்குமே பச்சை இலை!

உடலுக்கு உதாரணம் வாழைத்தண்டு
உணவாகி மருந்தாகும் அரும் தண்டு
மடலிலும் உணவுண்ணும் வழமையுண்டு
மழமழப்பும் வழுவழுப்பும் கொண்ட தண்டு!

வாழையடி வாழ்கவென வாழ்த்துமுண்டு
வம்சம் பெருக்க வளமான குட்டியுண்டு
சேலையிலே பட்டால் செல்லாத கயருண்டு
சேதனம் கொண்ட செழிப்பான பயிரொன்று!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading