20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 174
10/05/2022 செவ்வாய்
“வளம் தரும் வாழை”
————————
வாழையிலே பல்வேறு இனமுண்டு
வகைகளின் எண்ணிக்கை பலவுண்டு
ஏழையின் வீட்டிலும் இதுவுண்டு
எங்கும் காணுமின்ற மரமொன்று!
கதலியும் இதரையும் பன்றியும்
கன்னல் சுவைதரும் கப்பலும்
இதந்தரு இதரையும் மொந்தனும்
இனோரன்ன பிற இன வகையும்!
விரதத்திற்கு வேண்டும் வாழையிலை
வீட்டில் விருந்திற்கும் இதே இலை
பருவ பண்டிகைக்கு பயன்படும் இலை
படைப்பதற்கும் கிடைக்குமே பச்சை இலை!
உடலுக்கு உதாரணம் வாழைத்தண்டு
உணவாகி மருந்தாகும் அரும் தண்டு
மடலிலும் உணவுண்ணும் வழமையுண்டு
மழமழப்பும் வழுவழுப்பும் கொண்ட தண்டு!
வாழையடி வாழ்கவென வாழ்த்துமுண்டு
வம்சம் பெருக்க வளமான குட்டியுண்டு
சேலையிலே பட்டால் செல்லாத கயருண்டு
சேதனம் கொண்ட செழிப்பான பயிரொன்று!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...