முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 177
07/06/2022 செவ்வாய்
பழமை
———-
நேற்றைய தினத்துப் புதியது
நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய்
நினைவி லிருந்து விலகி விடின்
நாளைய தினம் அது பழையதா?

கொடியில் நேற்று உருவாகி
கொல்லையில் இன்று பூவாகி
கடிதினில் அரும் காயாகி
கனியாகின் அது பழையதா?

ஏணிக்கு ஒரு கால் போனால்
எடுத்து வீசுவது வழமைதான்!
தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும்
தூரா திருப்பது அடித்தளமே!

குளிர் காலம் ஒன்று வந்ததுமே
களை யிழந்து போன தெல்லாமே
துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு
தூணாய் இருப்பது பழம் வேரே!

புதிய தென்று நாம் கருதுபவை
புதிதாய் இன்று முளைத் தவையா?
பழைய ஊறலில் இருந்துதானே
பக்குவம் மேலும் பிறக்கிறது!

வயது முதிர்ந்ததால், உடல்
வலிமை சற்று இறங் கியதால்
கயவர்போல நினைத்து அவரை
காலில் போட்டு கசக்கலாமா?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading