16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 182
27/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“பறவைகள் பல விதம்…”
————————————
பாலையும் நீரையும் பிரித்து
பருகிடும் ஆற்றல் கொண்டு
காலமெல்லாம் வாழ்பவளே
கனிவாம் அன்னத் திருமகளே!
கொஞ்சும் இதழெடுத்து
கொவ்வை நிறம் கலந்து
அஞ்சுகமெனப் பெயரெடுத்து
அகிலத்தை ஆள்பவளே!
மஞ்ஞை எனும் பெயரெடுத்து
மானிடத்தின் மனங்கவர்ந்து
நெஞ்சத்தில் நிறைபவளே
நிகரில்லா அரும் மகளே!
தூரத்தில் வரும்போதே
துளைக்கும் குரலெடுத்து
ஆரவாரம் செய்பவளே
ஆர்ப்பரிக்கும் குயில் மகளே!
கூரான மூக்கெடுத்து
குனிந்து முகம் புதைத்து
காரிருள் கலையுமுன்னே
கனிரசம் குடிப்பவளே!
கொண்டைத் தலையசைத்து
கோதி நல்ல வீடமைத்து
அண்டி வந்தோர்க் குதவிடும்
அரும் நிறத்துக் கலைமகளே!
முகத்தில் வெள்ளையடித்து
முழு உலகும் வட்டமடித்து
கணத்தில் கொள்ளையடிக்கும்
கருடனே, கவின் மகளே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...