10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 182
27/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“பறவைகள் பல விதம்…”
————————————
பாலையும் நீரையும் பிரித்து
பருகிடும் ஆற்றல் கொண்டு
காலமெல்லாம் வாழ்பவளே
கனிவாம் அன்னத் திருமகளே!
கொஞ்சும் இதழெடுத்து
கொவ்வை நிறம் கலந்து
அஞ்சுகமெனப் பெயரெடுத்து
அகிலத்தை ஆள்பவளே!
மஞ்ஞை எனும் பெயரெடுத்து
மானிடத்தின் மனங்கவர்ந்து
நெஞ்சத்தில் நிறைபவளே
நிகரில்லா அரும் மகளே!
தூரத்தில் வரும்போதே
துளைக்கும் குரலெடுத்து
ஆரவாரம் செய்பவளே
ஆர்ப்பரிக்கும் குயில் மகளே!
கூரான மூக்கெடுத்து
குனிந்து முகம் புதைத்து
காரிருள் கலையுமுன்னே
கனிரசம் குடிப்பவளே!
கொண்டைத் தலையசைத்து
கோதி நல்ல வீடமைத்து
அண்டி வந்தோர்க் குதவிடும்
அரும் நிறத்துக் கலைமகளே!
முகத்தில் வெள்ளையடித்து
முழு உலகும் வட்டமடித்து
கணத்தில் கொள்ளையடிக்கும்
கருடனே, கவின் மகளே!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...