கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 183
02/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கங்குல் முதல் காரிருள் வரை”
——————————————-
இருண்டு செல்கிற நேரமது!
இரண்டும் கெட்டான் வேளையது!
கரந்து வாழும் கோட்டான்களும்
கண் விழிக்கும் காலமது!

வரண்டு போன நிலத்தையுமே
வளம் கொழிக்க வைப்பவனின்
கரங்கள் ஓய்ந்து களைப்புடனே
கால்கள் பின்னி நடந்திடவே!

திரண்டு, வெளியில் இரைதேடும்
திறமிகு பல்வகைப் பறவைகளும்,
மிரண்டு போய் தம் சிறகடித்து
மீண்டும் இருப்பிடம் விரைந்திடுமே!

மருண்ட விழிசேர் மான்களுமே
மாலை யிட்ட மணாளருடன்
விரைந்து தம்வீடு ஏகிடுமே
வெயில் தந்த இளைப்புடனே!

திரண்ட ஒளிக் கதிர்களுமே
திரும்பக் கண்களை மூடிடுமே!
வெகுண்டு, வேளை வந்ததென
விரைந்து ஆதவன் மறைந்திடுமே!

இருண்ட வானும் ஒளிர்விடவே!
இனிய நிலவும் வெளிப்படவே!
அருண்டு விழித்த அல்லியுமே
அழகு முகத்தைக் காட்டிடுமே!

பருமன் கொண்ட அரக்கனென
பகலை விழுங்கி ஏப்பமிடும்
இரவும் உலகைச் சூழ்ந்திடவே
இயற்கையும் துயிலுடன் ஒன்றிடுமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading