மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 245
12/12/2023 செவ்வாய்
“காதல்”
————
கண்டாங்கி சேலை கட்டி..
கண்ணிரண்டில் அம்பு பூட்டி..
சண்டாளக் குமரி யொருத்தி..
சாய்ந்தாள் எனை நெருங்கி!

காதலின் பொருள் விளக்கி..
கற்பனையின் இருள் விலக்கி..
மோதலின் சுவை பருக்கி..
மேலுமின்பம் தனைப் பெருக்கி!

நெஞ்சிலே அன்பு பொருத்தி..
நினைவுதனில் எனை இருத்தி..
துஞ்சிட விடாமலே வருத்தி..
தூரநின்று சிரித்தாள் சிறுக்கி!

அஞ்சுகச் சொண் டழகி!
அழுதாலும் சிலை அழகி!
மஞ்ஞை போல் நடையழகி!
மாநிலத்தில் ஓர் பேரழகி!

குயில் போல் குரலழகி!
குஞ்சரத்தின் கண் ணழகி!
வெயில் போல் நிறவழகி!
வேண்டுவரம் தரும் அழகி!

தமிழவள் மீது காதலென்றேன்!
தவறுதானே மீண்டும் என்றேன்!
தமிழ்மீது தானும் காதலென்றாள்!
தவறில்லை ஏதும் அதிலென்றாள்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading