19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 251
30.01.2024 செவ்வாய்
“மாசி”
———
தைமகளுக் கிளை யவளே!
தலைமகளுக் கடுத் தவளே!
பொய் மழைக் குரியவளே!
போக மெலாம் தருபவளே!
நகுலமலை தருமோர் விழா,
நமக்கு அதுவோர் பெருவிழா,
அகிலமே அனுட்டிக்கு மிவ்விழா,
அதுசிவ ராத்திரித் தனிவிழா!
மாசி மகத்தின் மகத்துவம்,
மாமாங்க தீர்த்த உற்சவம்,
காசி முதல்வர் தரிசனம்,
காணக் கிடையா தனுதினம்!
மாசி மாதக் குளிரமைப்பு,
மாறுபட்ட ஓர் விறைப்பு,
ஊசி குத்தும் ஓருணர்வு,
உறக்கம் நீண்டிட மிகவிருப்பு!
நாசியும் மூக்கும் அடைக்கும்,
ஙஞண நமனவும் ஒலிக்கும்,
மூசிமூசியே அடிக்கடி தும்மும்,
மூக்கும் தொண்டையும் நோகும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...