புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

குழலோசை

மூச்சுக் காற்றை வாங்கி தடவும் விரலைத் தாங்கி புல்லாங்குழல் தள்ளும் ஓசை
புரிந்திடச் சொன்னேன்
அதுவே குழலோசை

கேட்பீரோ எந்தன் குரலோசை
கேட்டீரோ கண்ணன் குழலோசை

மொட்டு மனமும் சிரிக்கும்
கட்டு விட்டு
பட்ட மனமும் துளிர்க்கும்
கொட்டும் குழலோசை மெட்டால்

நாடி நரம்புகள் சிலிர்க்கும்
நாளையென்ற நினைவும் மறக்கும்

மெத்தையென உடலும் மிதக்கும்
மோக முள்ளும் நழுவும்
மோகனம் வந்து தழுவும்
நத்தையென உணர்வும் ஊரும்
நிம்மதியே நிகழ்வெனக் கூறும்
நிகழ்த்தியவர் யாரென்றும் அறியும்

தன்வினை கழன்று ஓடும்
ஆனந்த சுகமே சூழும்
பரமானந்தப் பயில்வே நிகழும்

மேயும் பசுக்களும் நாமே
மேய்ச்சல் மறந்து
சாயும் செவியால் சுரத்தை ரசிப்பவரும் நாமே

ராதை கோபியராயே ஆவோம்
கண்ணன் குழலோசைக்கே சாய்வோம்
அவனருளையே எங்கும் பாயச்செய்வோம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading