மனோகரி ஜெகதீசன்

குந்த வந்ததோ குத்தகை நிலம்
குந்தியிருக்க இவருக்கு மட்டுமோ இடம்
முந்தி இருந்தவர் முகவரியில் நாமே

அந்தரிக்க அடக்கி ஆளனி சுருக்கி
தொந்தி பெருக்க சுரண்டிச் சொகுசாளா
தந்தது வரமேதுவோ
தலைவனென்ற பதமோ

கேட்டால் வரும் கேடு
கேளாமலே நீயும் ஓடு
பட்டாலே தெரியும் பாடு
பவித்திரம் கெட்டவரை கனவிலும் தீண்டாதே

அந்தமறியா அறிவுச் சிக்கலே ஆட்டுது இவரைத் தினம்
பந்தப் பசையற்ற பாங்கே
சொந்தங்களை துரத்துது வனம்

திருந்தாத இவரிருப்பால் தீமிதிப்பே தினம் தினம்
வருந்தாத வாழ்வொன்று
வாழுமோ எம்மினம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading