” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

குந்த வந்ததோ குத்தகை நிலம்
குந்தியிருக்க இவருக்கு மட்டுமோ இடம்
முந்தி இருந்தவர் முகவரியில் நாமே

அந்தரிக்க அடக்கி ஆளனி சுருக்கி
தொந்தி பெருக்க சுரண்டிச் சொகுசாளா
தந்தது வரமேதுவோ
தலைவனென்ற பதமோ

கேட்டால் வரும் கேடு
கேளாமலே நீயும் ஓடு
பட்டாலே தெரியும் பாடு
பவித்திரம் கெட்டவரை கனவிலும் தீண்டாதே

அந்தமறியா அறிவுச் சிக்கலே ஆட்டுது இவரைத் தினம்
பந்தப் பசையற்ற பாங்கே
சொந்தங்களை துரத்துது வனம்

திருந்தாத இவரிருப்பால் தீமிதிப்பே தினம் தினம்
வருந்தாத வாழ்வொன்று
வாழுமோ எம்மினம்

Nada Mohan
Author: Nada Mohan