பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பரவசம்

மிகு களிப்பே பரவசம்
காட்ட வைக்குமது பலரசம்
கண்டிட உண்டே பல வழிகள்
காணும் முறையில்
காட்டுமது
அவரவர் முகம்
வாழும் முறையில்
வரையுமது நன்மை தீமை

பாவலனுக்குப் பொழுதும் பாப்புனைதலே தரும் பரவசம்
காவலனுக்கு காவலை நாட்டுதலே பரவசம்

பேரன்பு நிறைந்தவனுக்குப் பெரும் சேவையே பரவசம்

குடிமகனுக்கு மதுக்கொடையே தரும் பரவசம்
அடிவருடிகளுக்கு அவர்செயலே தரும் பரவசம்
கோடிகள் தேடுவோருக்குப் பணக்குவிவே பரவசம்

பரவசத் தேடல்கள்சில
பிறர்வசம் சேர்க்கும்
உரமின்மை கொடுத்து அசடும் ஆக்கும்
கசடும் கோர்க்கும்

பரவசம் ஊட்டமே
வாழ்வுக்கு
பாதையை மாற்றாது செறிகையில்

Nada Mohan
Author: Nada Mohan