” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பள்ளிப் பருவத்திலே…

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025

வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின் வரமான பள்ளிச்சாலை
புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம்
துயர் மறந்த தருணம்
பாடம்படிப்பு விளையாட்டு நடனமென
பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் !

காலத்தைமுந்தி ஓடியகனவுகள்
வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள்
வெற்றிக்கான பயிற்சியின் காலமது
புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி
மலரும் நினைவுகள் அரும்பிய பருவம்
மனதை நிறைத்த மகிழ்வின் பயணம்
பள்ளியென்ற பொக்கிஷக்காலம் !

பன்னிரெண்டு ஆண்டுப் பயணம்
கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக
படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு
பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே
என்வாழ்வின் பொற்காலமே !