பள்ளிப் பருவத்திலே…

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025

வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின் வரமான பள்ளிச்சாலை
புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம்
துயர் மறந்த தருணம்
பாடம்படிப்பு விளையாட்டு நடனமென
பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் !

காலத்தைமுந்தி ஓடியகனவுகள்
வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள்
வெற்றிக்கான பயிற்சியின் காலமது
புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி
மலரும் நினைவுகள் அரும்பிய பருவம்
மனதை நிறைத்த மகிழ்வின் பயணம்
பள்ளியென்ற பொக்கிஷக்காலம் !

பன்னிரெண்டு ஆண்டுப் பயணம்
கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக
படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு
பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே
என்வாழ்வின் பொற்காலமே !

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading