இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பள்ளிப் பருவத்திலே…

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025

வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின் வரமான பள்ளிச்சாலை
புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம்
துயர் மறந்த தருணம்
பாடம்படிப்பு விளையாட்டு நடனமென
பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் !

காலத்தைமுந்தி ஓடியகனவுகள்
வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள்
வெற்றிக்கான பயிற்சியின் காலமது
புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி
மலரும் நினைவுகள் அரும்பிய பருவம்
மனதை நிறைத்த மகிழ்வின் பயணம்
பள்ளியென்ற பொக்கிஷக்காலம் !

பன்னிரெண்டு ஆண்டுப் பயணம்
கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக
படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு
பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே
என்வாழ்வின் பொற்காலமே !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading