பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன்

பள்ளிப்பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே
ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம்

வெள்ளி தோறும் பாட்டுப்பாடி நாம்
வேண்டும் இறையைத் தொழுது வாழ்ந்தோம்
கள்ளமில்லா வெள்ளை மனதாய்
கவலையற்று வாழ்ந்தோம் அன்று

பசுமை வாழ்க்கை பள்ளி வாழ்க்கை
வெறுமையற்று வெற்றியோடு வாழ்ந்தோம்
சுற்றும் முற்றும் சுழன்று ஓடி
சற்றும் கவலை மறந்து வாழ்ந்தோம்

பருவவயது பசுமை நினைவு
உருவம் தெரியா உலகவாழ்வு
விரும்பும் பள்ளி பருவம்
விளையாட்டாய் கடந்ததே!

நகுலா சிவநாதன் 1808

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading