நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன்

பள்ளிப்பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே
ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம்

வெள்ளி தோறும் பாட்டுப்பாடி நாம்
வேண்டும் இறையைத் தொழுது வாழ்ந்தோம்
கள்ளமில்லா வெள்ளை மனதாய்
கவலையற்று வாழ்ந்தோம் அன்று

பசுமை வாழ்க்கை பள்ளி வாழ்க்கை
வெறுமையற்று வெற்றியோடு வாழ்ந்தோம்
சுற்றும் முற்றும் சுழன்று ஓடி
சற்றும் கவலை மறந்து வாழ்ந்தோம்

பருவவயது பசுமை நினைவு
உருவம் தெரியா உலகவாழ்வு
விரும்பும் பள்ளி பருவம்
விளையாட்டாய் கடந்ததே!

நகுலா சிவநாதன் 1808

Nada Mohan
Author: Nada Mohan