” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன்

பள்ளிப்பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே
ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம்

வெள்ளி தோறும் பாட்டுப்பாடி நாம்
வேண்டும் இறையைத் தொழுது வாழ்ந்தோம்
கள்ளமில்லா வெள்ளை மனதாய்
கவலையற்று வாழ்ந்தோம் அன்று

பசுமை வாழ்க்கை பள்ளி வாழ்க்கை
வெறுமையற்று வெற்றியோடு வாழ்ந்தோம்
சுற்றும் முற்றும் சுழன்று ஓடி
சற்றும் கவலை மறந்து வாழ்ந்தோம்

பருவவயது பசுமை நினைவு
உருவம் தெரியா உலகவாழ்வு
விரும்பும் பள்ளி பருவம்
விளையாட்டாய் கடந்ததே!

நகுலா சிவநாதன் 1808

Nada Mohan
Author: Nada Mohan