” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முடிவா விடிவா

ஜெயம் தங்கராஜா

முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை இன்னும் சுமந்திட்ட சோகம்
தெரியவில்லை இன்னும் எத்தனை பாகம்

மலருமே தேசம் என்கின்ற கனவு
பலரது வாழ்க்கையின் ஒருவேளை உணவு
சிறுபான்மை என்பதால் வாங்குகின்ற உதை
பொறுமையின் பக்கங்களால் நீளுதிந்த கதை

குட்ட குட்ட குனிகின்ற சீவியம்
துட்டனோ ஒயவில்லை வலியென கூவியும்
பெரும்பான்மை என்பதால் அடக்கியே ஆள்கின்றார்கள்
திருந்தாத ஜென்மமாய் அரக்கனாய் வாழ்கின்றர்கள்

அதிபராய் இருந்தவர்கள் இதுவரையில் சரியாயில்லை
புதிதாய் வந்தவரையும் உடனடியாக புரியவில்லை
பிரச்சினையை தீர்க்காமல் அதிகாரம் தவிர்க்கின்றது
அரசியலால் அனாதையாகி இனமொன்று தவிக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan