நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி

உள்ளக் கமலத்தில் உறவின் மொழி
தெள்ளத்தெளிவாய் உரைத்தநெறி
கொள்ளை அழகினை கொடுத்த திலை
எண்ணித் தெளிந்திட செவி நுகர்ந்த நொடி

சின்னக் குழந்தைகள் சிறு கைகளினால்
செல்லத் தமிழினை சீர் தொடுத்து
பண்ணும் பாவுமாய் பின்னி மெல்ல
நிதம் உரத்தொரு உவகை களித்த படி

நாளைய வாழ்வுக்கு விதைத்த விதை
நித்தமும் நிதமுமாய் செப்பனிட்டே
கல்வியில் உயர்ந்தோர் களை பிடுங்கி
எமை கனிவுற நிலை பெற வளர்த்த செயல்

எண்ணிலடங்கா நினைவுகளை-மனம்
ஏந்திக்களித்திடும் பள்ளிப்பருவமது

Nada Mohan
Author: Nada Mohan