பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி

உள்ளக் கமலத்தில் உறவின் மொழி
தெள்ளத்தெளிவாய் உரைத்தநெறி
கொள்ளை அழகினை கொடுத்த திலை
எண்ணித் தெளிந்திட செவி நுகர்ந்த நொடி

சின்னக் குழந்தைகள் சிறு கைகளினால்
செல்லத் தமிழினை சீர் தொடுத்து
பண்ணும் பாவுமாய் பின்னி மெல்ல
நிதம் உரத்தொரு உவகை களித்த படி

நாளைய வாழ்வுக்கு விதைத்த விதை
நித்தமும் நிதமுமாய் செப்பனிட்டே
கல்வியில் உயர்ந்தோர் களை பிடுங்கி
எமை கனிவுற நிலை பெற வளர்த்த செயல்

எண்ணிலடங்கா நினைவுகளை-மனம்
ஏந்திக்களித்திடும் பள்ளிப்பருவமது

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading