” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முடிவா, விடிவா-74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025

அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட முடியா
கருப்பொருள் சாட்சி இதனால்

இருளின் போர்வை விலக
இமைக்கும் காலை பொழுது
காலம் கடந்த சோகம்
கழன்று போகும் மனது

முடிவென்று எதுவுமில்லை.
முயன்றால் விடிவும் படரும்
முயற்சிகள் பலமுறை தோற்று
முடிவிலா பயணமும் தொடரும்..

அலைகடல் போன்ற வாழ்வில்
அமைதியும் சீற்றமும் எம்மில்
நம்பிக்கை படகில் I பயணிக்க
எம் தேசக் கனவில் விடிவுடன் முடிவும்.

Jeba Sri
Author: Jeba Sri