கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பரவசம்

மிகு களிப்பே பரவசம்
காட்ட வைக்குமது பலரசம்
கண்டிட உண்டே பல வழிகள்
காணும் முறையில்
காட்டுமது
அவரவர் முகம்
வாழும் முறையில்
வரையுமது நன்மை தீமை

பாவலனுக்குப் பொழுதும் பாப்புனைதலே தரும் பரவசம்
காவலனுக்கு காவலை நாட்டுதலே பரவசம்

பேரன்பு நிறைந்தவனுக்குப் பெரும் சேவையே பரவசம்

குடிமகனுக்கு மதுக்கொடையே தரும் பரவசம்
அடிவருடிகளுக்கு அவர்செயலே தரும் பரவசம்
கோடிகள் தேடுவோருக்குப் பணக்குவிவே பரவசம்

பரவசத் தேடல்கள்சில
பிறர்வசம் சேர்க்கும்
உரமின்மை கொடுத்து அசடும் ஆக்கும்
கசடும் கோர்க்கும்

பரவசம் ஊட்டமே
வாழ்வுக்கு
பாதையை மாற்றாது செறிகையில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading