மனோகரி ஜெகதீஸ்வரன்

பட்டினி

உண்ணாதிருத்தலே பட்டினி
உருவாகும் அதுவும் பலவழி
சொன்னால் புரியுமோ உனக்கது
சோடித்த வழக்கமானது
இன்று எமக்கது

மலிவான பொருளாய் எம்உயிர்கள் தெரிவானதால் கிடக்கின்றோம் பட்டினி
இழிவான மனிதர் இடுகட்டளையால் சருகாகிக் கிடக்கிறோம்
வயிறு சுருங்கி
பலியாடுகள் நாமாகித் தவிக்கின்றோம் விலைவாசி ஏறி
களவாடுதல் களமேறி
கருணை இருளானதால்
சுரமேற்றி உருவேற்றுகின்றோம் உலகை
சரிகின்ற எம்முயிரேந்த
உணவு நிறை கலங்களே எம் தேவை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading