நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீ

அடுப்பிலே எரிந்தால் தீ
ஆறும் வயிறு

காட்டிலே எரித்தால் தீ அழியும்
வளத்தொடு விலங்கு

நாட்டிலே எரிந்தால் தீ
நாசமே
நாளை என்பதே இல்லையே
இது நாம் கண்ட உண்மையே

தீமை சமைத்திடும் ஆயுதமே தீ
தீயோர் கையகப்படின்

தீட்டு இவரால் தீயைத்
தீண்டாதிருக்க
போட்டு விடுங்கள் பூட்டு

மேலோர் கையே ஏந்தட்டும் ஏற்றடும்
தீயை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan