மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நாளை மட்டுமே இருப்பு
கோலை வைத்திருக்கக் காட்டாதே பிணக்கு
நாயோ மேலாம் நன்றியில்
நீயோ மிகக் கீழாம்

மெய்யை சுருக்கி பொய்யைப் பெருக்கி
சொத்தைச் சுருட்டி
சேதத்தைக் கூட்டி
காட்டினாய் காலத்தைக் காரணமாய்

தீவினை அகோரம் திரும்பித் திராண்டெழும் அதிவேகம்
ஆற்றிய மூடர் நீவிரே
அது தாக்குது பாரும் நேரே
கையளவு இதயத்தை பொய்வடிவு ஆக்கினீர்
மெய்யழகு காட்டுது பாரும் திரண்டு.8

Nada Mohan
Author: Nada Mohan