மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பு

உள்ளத்தில் தோன்றும்
உணர்வே விருப்பு
உயர்த்தும் தாழ்த்தும்
அடிக்கடி உதித்து

கனவிலும் நினைவிலும்
உலவும் கால்பதித்து
மனதையும் உருக்கும்
முயலென நெருக்கி

கதைபல வீசும்
களமதில் குதித்து
எதையெனச் சொல்வேன்
இங்கு எடுத்து

புத்தரின் விருப்பினாலே
பூத்தது ஞானம்
பூண்டது அதனால்
பூமியும் புதுக்கோலம்
சித்தரும் கொண்டார்
சிந்தையால் சிவத்தியானம்
சித்திகளைப் பெருக்கிச்
சிந்தியது சிவயோகம்

கர்த்தரின் விருப்பே
கழற்றியது தீதை
காட்சியும் ஆனது
கண்களுக்குச் சிலுவை
மீளவும் நிகழ்ந்தது
அவரின் எழுகை

எத்தரின் ஆசையோ
எறிந்திடும் மாசை
சுத்தமும் போகும்
சுகமும் சாகும்

சீதை, இராமன்
கொண்ட விருப்பால்
மிதிலை கண்டது வில் வெடிப்பு
இராவணன் ஆசையாலேயே
வெடித்தது ராம நெஞ்சு
துடித்தாள் சீதைக்குஞ்சு
தாவினான் அனுமன்
தழுவியது தீ

சீதையின் விருப்பினாலே
திண்டது அவளைத் தீ
பாதையிட்டது இராம நீதி
பழுக்கொடுத்தது பாமரச் சதி

கம்பனின் விருப்பினாலே
கண்டோம் காவியம்

மீனவன் விருப்பாலேயே
மிதந்தோடும் படகு
அகப்படா விருப்பால்
அலைந்தோடும் மீனும்
அகப்படின் அதுவும் அல்லாடிச் சாகும்
அடுத்தவர் ஆசைக்காய்
அடுப்பினிலே வேகும்.

மனோகரி ஜெகதீஸ்வரன்
பதியவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading