மனோகரி ஜெகதீஸ்வரன்

அலை ஓசை

சந்தம் சிந்தும் அலையோசை
சட்டென மாறும் அதனோசை
சிந்தும் அதுவும் பாவோசை
சீறியெழும் கவிபுனை யாசை
சொந்தம் கடலுக்கு அதனோசை
செய்திகள் பலதரும் அலையோசை

நித்தம் கேட்கும் அலையோசை
நிகழ்த்தும் அதுவும் பலவோசை
எத்தும் அலையால் வருமோசை
ஏந்தக் காதும்கொள்ளும் பேராசை

சீறிச் சினப்பின் கடலன்னை
சீறியலையும் கக்கும் பேரோசை
கீறிக் கிழிக்குமது காதை
கிட்ட இருப்பின் எட்டிமோதி
ஆறி யடங்கின் கடலன்னை
அலையும் துப்பும் அமைதியோசை
கூறிடும் செய்தி காவுமோசை
மீனவருக்கான அரணோசை அருளோசை

(கடலின் பாஷையே அலையோசை )

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading