ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

அலை ஓசை

சந்தம் சிந்தும் அலையோசை
சட்டென மாறும் அதனோசை
சிந்தும் அதுவும் பாவோசை
சீறியெழும் கவிபுனை யாசை
சொந்தம் கடலுக்கு அதனோசை
செய்திகள் பலதரும் அலையோசை

நித்தம் கேட்கும் அலையோசை
நிகழ்த்தும் அதுவும் பலவோசை
எத்தும் அலையால் வருமோசை
ஏந்தக் காதும்கொள்ளும் பேராசை

சீறிச் சினப்பின் கடலன்னை
சீறியலையும் கக்கும் பேரோசை
கீறிக் கிழிக்குமது காதை
கிட்ட இருப்பின் எட்டிமோதி
ஆறி யடங்கின் கடலன்னை
அலையும் துப்பும் அமைதியோசை
கூறிடும் செய்தி காவுமோசை
மீனவருக்கான அரணோசை அருளோசை

(கடலின் பாஷையே அலையோசை )

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading