அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

அலை ஓசை

சந்தம் சிந்தும் அலையோசை
சட்டென மாறும் அதனோசை
சிந்தும் அதுவும் பாவோசை
சீறியெழும் கவிபுனை யாசை
சொந்தம் கடலுக்கு அதனோசை
செய்திகள் பலதரும் அலையோசை

நித்தம் கேட்கும் அலையோசை
நிகழ்த்தும் அதுவும் பலவோசை
எத்தும் அலையால் வருமோசை
ஏந்தக் காதும்கொள்ளும் பேராசை

சீறிச் சினப்பின் கடலன்னை
சீறியலையும் கக்கும் பேரோசை
கீறிக் கிழிக்குமது காதை
கிட்ட இருப்பின் எட்டிமோதி
ஆறி யடங்கின் கடலன்னை
அலையும் துப்பும் அமைதியோசை
கூறிடும் செய்தி காவுமோசை
மீனவருக்கான அரணோசை அருளோசை

(கடலின் பாஷையே அலையோசை )

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading