அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்திம் சந்திப்பு 216.
“ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே
காலனும் வருவான்
தூரமது துடிக்க
சுருக்கை இடுவான்

செல்வேன் என்றே
செல்வமும் செல்லும்
நல்லோர் செயலை
நிறுத்தியும் செல்லும்
அல்லல் உள்ளேறி
ஆக்கினை செய்யும்
பல்விழுத்திப் பருவமும்
பழிப்புக் காட்டும்
கல்லாகி மனமும்
கருணையைச் சுருக்கும்
வெல்வார் எவருண்டு
நிலையாமை கழற்றி

நீர்க்குமிழின் தோற்றமும்
நிமிடக் கரைவும்
பார்த்திடச் சேர்த்திடுமே நிலையாமைக் கருவை
திருமதி மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading