சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

காரோடத் தானோடி வந்தாள் வசந்தம்
பாரோடு கலந்தாடிப்
பூட்டினாள் பசுமை
சீரோடு சிறப்பெய்தச்
சிந்தினாள் நிகழ்வை
வேரோடே சரிந்திடவே
விழ்த்தவே தீதை

வசந்தத்தில் ஓர்நாள்
வண்ணம் காட்ட
வரைவிட்டேன் பாவை

துளிர்த்தன மரங்கள்
தளிர்களைத் தாங்கி
நிறைந்தன அவையும்
குடைகளை யாக்கி
சிரித்தன பூக்கள்
கிளைகளில் குந்தி
சிதறிய பின்னும்
திட்டின கோலம்
களித்தன வண்டுகள்
தேனதனை யுண்டு
காவினபின் மணிகளை
கருவினை யாக்க

அடுத்தடுத்துக்
கூவின குயில்கள்
குரலெடுத்து
விடுப்பெடுத்துக்
குழந்தையும்
குரல்கொடுத்தது
தனைமறந்து

தென்றலும் தீண்டித் துடைத்தது வெம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan