மனோகரி ஜெகதீஸ்வரன்

தவிப்பு

உருவற்ற உணர்வே தவிப்பு
உருவாகின் உருக்கிடும் நெருப்பு
நொறுக்கிச் சரித்திடும் தவிப்பு
உருக்கொள்ளா மனமும் உண்டோ
கருக்கிடு வழிகண்டு
சுருக்கிடுவாரே
மருவற்று வாழ்வார்
மகிழ்வோடு

அச்சம் ஆளாது விரட்டி
ஆதித ஆசை கட்டி
உச்சம் தொடுஉணர்வு ஊட்டி
உழைப்பைக் நாளும் பற்றி
நெருக்கீடு குறுக்கீடு
தடுத்து
நெஞ்சுரம் கொண்டு சுழலின்
அருகேறி அருட்டாது தவிப்பு
அகமும் ஆடுகளம் ஆகாது

Nada Mohan
Author: Nada Mohan