வரம்பு மீறாதே
-
By
- 0 comments
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
மனோகரி ஜெகதீஸ்வரன்
பருவ ஏட்டின் இறுதிப் பக்கம்
தருமது பலவிதத் தாக்கம்
இருமதைச் சொல்கின்றேன் இயன்றவரை
முதுகெலும்பு வளைந்து போகும்
மூன்றாங்கால் முளைத்து தாங்கும்
ஒடுங்கியுடல் ஓர்மம் இழக்கும்
நடுநடுங்கிப் பல்லும் நழுவும்
சுடுசொல்லை நாவும் வீசும்
விடுகதைகள் பலவும் பேசும்
இரைசப்பு ஏக்கம் கூடும்
புரையேறிப் போக்கும் காட்டும்
நரையப்பி நளினம் தீட்டும்
திரைபோட்டுப் பார்வை மிரட்டும்
நடைதளர்ந்து நாட்டியம் ஆடும்
உடைகழன்று அம்மணம் போர்க்கும்
விடைமறந்து மனமும் சோரும்
படையெடுத்து நினைவு வாட்டும்
இறையன்பில் நாட்டம் கூடும்
மறையோது கூட்டம் சேரும்
விறைப்பாயே மனமும் ஆகும்
குறைதுப்பி உறவும் போகும்
இதுவாயே வந்த பருவம்
முதுமை என்பது அமுதம்
அதுதரும் அனுபவப் பாடம்
இதுவேர் இளையோர் கல்விக்கூடம்
பழுத்தல் வழமை தானே
அழுவது மேனோ முதுமை
இழுக்கென எண்ணல் ஏனோ
பழுவினைச் சுமத்துதல் சரியோ
அழுக்கென வெறுத்தல் முறையோ
தழுவுதல் தருமோ பாவம்
விழுதுகள் உணரா விந்தை
பழுதுகள் தானே பரவுது இங்கே
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments