மனோகரி ஜெகதீஸ்வரள்

சாந்தி

அமைதியே சாந்தி
அனைத்து நலமும்
அண்டிட அமைய, சாந்தி
சமைத்திட நீயும் சிந்தி
சங்கடமின்றி நல்லதை ஏந்தி.
புதைத்து தீயதை புறத்தேஓட்டி
உதைத்து வாழ்வோருக்கு உறவாமோ சாந்தி
இதயத்தால் அன்பை
இறைத்து அணைத்து
விதைப்போர் கரங்களில்
விளையும் சாந்தி
சித்தம் சிறந்தாலே
சேர்ந்தணையும் சாந்தி
யுத்தம் ஓய்ந்தாவே
நித்தம் நிலை யாகும்
அன்பை வெளிக்கொணர்ந்து
ஆலிங்கணம் செய்யும்
பண்பை சுரக்க
பலமாய் மனத். உதிக்கும்
மற்றவர் வலிக்கு
மருந்திடத் தொற்றும்
சென்றவருக்கு கடன்செய்ய என்றெவரோரும் அன்பாய். இணங்கி உறவாட
அங்கு உதிக்கும் மன அமைதி
அதுதானே சாந்தி ஆம் அதுதான் சாந்தி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading