சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரள்

சாந்தி

அமைதியே சாந்தி
அனைத்து நலமும்
அண்டிட அமைய, சாந்தி
சமைத்திட நீயும் சிந்தி
சங்கடமின்றி நல்லதை ஏந்தி.
புதைத்து தீயதை புறத்தேஓட்டி
உதைத்து வாழ்வோருக்கு உறவாமோ சாந்தி
இதயத்தால் அன்பை
இறைத்து அணைத்து
விதைப்போர் கரங்களில்
விளையும் சாந்தி
சித்தம் சிறந்தாலே
சேர்ந்தணையும் சாந்தி
யுத்தம் ஓய்ந்தாவே
நித்தம் நிலை யாகும்
அன்பை வெளிக்கொணர்ந்து
ஆலிங்கணம் செய்யும்
பண்பை சுரக்க
பலமாய் மனத். உதிக்கும்
மற்றவர் வலிக்கு
மருந்திடத் தொற்றும்
சென்றவருக்கு கடன்செய்ய என்றெவரோரும் அன்பாய். இணங்கி உறவாட
அங்கு உதிக்கும் மன அமைதி
அதுதானே சாந்தி ஆம் அதுதான் சாந்தி

Nada Mohan
Author: Nada Mohan