“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மாமருந்து

நேவிஸ் பிலிப் கவி இல (348) 24/10/24

ஆறறிவு மனிதருக்கு
ஆண்டவனருளிய அன்பளிப்பு
அகத்தினழகை முகத்தில் காட்டும
பற்றிக் கொள்பவரை
தொற்றிக் கொள்ளும்

விலை மதிப்பில்லாதது
விற்பனைக்கு வராதது
மனித குலத்திற்கே உரித்தானது
உடல் நல வாழ்விற்கு சத்தானது

இன்முகம் காட்டி நன் மனம் சேர்க்கும்
நோய்களே இல்லா பேரின்பம் காட்டும்
சோதனை வரும்கால் துணையாய் காக்கும்
வேதனை தீர்க்கும் நட்பாய் மாறும்

வேறெந்த உயிரிலும் இல்லாத ஒன்று
நம்மிடம் இதை விட வேறேது நன்று
எம்மோடு பிறரையும் இன்புற செய்யும்
முகம் மலர்ந்து சுகம்தரும் நல் மருந்து
அதுவே சிரிப்பென்னும் மாமருந்து
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan