” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாமருந்து

நேவிஸ் பிலிப் கவி இல (348) 24/10/24

ஆறறிவு மனிதருக்கு
ஆண்டவனருளிய அன்பளிப்பு
அகத்தினழகை முகத்தில் காட்டும
பற்றிக் கொள்பவரை
தொற்றிக் கொள்ளும்

விலை மதிப்பில்லாதது
விற்பனைக்கு வராதது
மனித குலத்திற்கே உரித்தானது
உடல் நல வாழ்விற்கு சத்தானது

இன்முகம் காட்டி நன் மனம் சேர்க்கும்
நோய்களே இல்லா பேரின்பம் காட்டும்
சோதனை வரும்கால் துணையாய் காக்கும்
வேதனை தீர்க்கும் நட்பாய் மாறும்

வேறெந்த உயிரிலும் இல்லாத ஒன்று
நம்மிடம் இதை விட வேறேது நன்று
எம்மோடு பிறரையும் இன்புற செய்யும்
முகம் மலர்ந்து சுகம்தரும் நல் மருந்து
அதுவே சிரிப்பென்னும் மாமருந்து
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan