நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

மாமருந்து

நேவிஸ் பிலிப் கவி இல (348) 24/10/24

ஆறறிவு மனிதருக்கு
ஆண்டவனருளிய அன்பளிப்பு
அகத்தினழகை முகத்தில் காட்டும
பற்றிக் கொள்பவரை
தொற்றிக் கொள்ளும்

விலை மதிப்பில்லாதது
விற்பனைக்கு வராதது
மனித குலத்திற்கே உரித்தானது
உடல் நல வாழ்விற்கு சத்தானது

இன்முகம் காட்டி நன் மனம் சேர்க்கும்
நோய்களே இல்லா பேரின்பம் காட்டும்
சோதனை வரும்கால் துணையாய் காக்கும்
வேதனை தீர்க்கும் நட்பாய் மாறும்

வேறெந்த உயிரிலும் இல்லாத ஒன்று
நம்மிடம் இதை விட வேறேது நன்று
எம்மோடு பிறரையும் இன்புற செய்யும்
முகம் மலர்ந்து சுகம்தரும் நல் மருந்து
அதுவே சிரிப்பென்னும் மாமருந்து
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan