மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மாறாத சுவடுகள்

ரஜனி அன்ரன்

“ மாறாத சுவடுகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.05.2024

இரத்த வெள்ளத்தில் மூழ்கிய மண்
இனத்திற்காகவே ஈகையான பூமி
நந்திக்கடலும் செங்கடலான தருணம்
பலியாக்கப்பட்ட உறவுகள்
வலியினால் துடித்த உயிர்கள்
துயரம் சொல்லத் தவிக்கிறது மொழி
விழிகளில் வழிகிறது கண்ணீர்
முள்ளி வாய்க்காலே ஒரு துயரகாவியம் !

போரின் கொடுமை பசிபட்டினி
அழிவுகளும் அநியாய தாக்குதல்களும்
ஆறாத காயங்கள் மாறாத சுவடுகள்
நீறுபூத்த நெருப்பாக நெஞ்சமதில் இருப்பாக
ஆழ்மனதில் புதைந்த ஆறாத்துயரம்
ஆழமாய் புதைந்த அத்தியாயம் !

வானம் கூட சோகத்தைப் பொழிய
பாட மறந்தன பறவைகளும்
பொறுமையை இழந்தாள் பூமித்தாயும்
வீரர்களின் தியாகமும்
வலிசுமந்த மக்களின் துயரமும்
காயப்பட்ட மனங்களும் ரணங்களும்
நினைவுகளில் எழுந்த தீராத் துயரம்
அத்தனையும் மாறாத சுவடுகளே !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading