09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மாறாத சுவடுகள்
ரஜனி அன்ரன்
“ மாறாத சுவடுகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.05.2024
இரத்த வெள்ளத்தில் மூழ்கிய மண்
இனத்திற்காகவே ஈகையான பூமி
நந்திக்கடலும் செங்கடலான தருணம்
பலியாக்கப்பட்ட உறவுகள்
வலியினால் துடித்த உயிர்கள்
துயரம் சொல்லத் தவிக்கிறது மொழி
விழிகளில் வழிகிறது கண்ணீர்
முள்ளி வாய்க்காலே ஒரு துயரகாவியம் !
போரின் கொடுமை பசிபட்டினி
அழிவுகளும் அநியாய தாக்குதல்களும்
ஆறாத காயங்கள் மாறாத சுவடுகள்
நீறுபூத்த நெருப்பாக நெஞ்சமதில் இருப்பாக
ஆழ்மனதில் புதைந்த ஆறாத்துயரம்
ஆழமாய் புதைந்த அத்தியாயம் !
வானம் கூட சோகத்தைப் பொழிய
பாட மறந்தன பறவைகளும்
பொறுமையை இழந்தாள் பூமித்தாயும்
வீரர்களின் தியாகமும்
வலிசுமந்த மக்களின் துயரமும்
காயப்பட்ட மனங்களும் ரணங்களும்
நினைவுகளில் எழுந்த தீராத் துயரம்
அத்தனையும் மாறாத சுவடுகளே !
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...