நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாறாத சுவடுகள்

ரஜனி அன்ரன்

“ மாறாத சுவடுகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.05.2024

இரத்த வெள்ளத்தில் மூழ்கிய மண்
இனத்திற்காகவே ஈகையான பூமி
நந்திக்கடலும் செங்கடலான தருணம்
பலியாக்கப்பட்ட உறவுகள்
வலியினால் துடித்த உயிர்கள்
துயரம் சொல்லத் தவிக்கிறது மொழி
விழிகளில் வழிகிறது கண்ணீர்
முள்ளி வாய்க்காலே ஒரு துயரகாவியம் !

போரின் கொடுமை பசிபட்டினி
அழிவுகளும் அநியாய தாக்குதல்களும்
ஆறாத காயங்கள் மாறாத சுவடுகள்
நீறுபூத்த நெருப்பாக நெஞ்சமதில் இருப்பாக
ஆழ்மனதில் புதைந்த ஆறாத்துயரம்
ஆழமாய் புதைந்த அத்தியாயம் !

வானம் கூட சோகத்தைப் பொழிய
பாட மறந்தன பறவைகளும்
பொறுமையை இழந்தாள் பூமித்தாயும்
வீரர்களின் தியாகமும்
வலிசுமந்த மக்களின் துயரமும்
காயப்பட்ட மனங்களும் ரணங்களும்
நினைவுகளில் எழுந்த தீராத் துயரம்
அத்தனையும் மாறாத சுவடுகளே !

Nada Mohan
Author: Nada Mohan