மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273

மாற்றத்தின் ஒளியாய்..

ஆண்டு ஒன்றின்
அழகிய மலர்வில்
அத்தனை உளங்களில்
மாற்றத்தின் ஒளியாய்
இருளெனும் துயரது
இனி இல்லை என்றாகி
வரு பகை விலகி
வளமது சிறக்க
தமிழர் திரு நாள் தான்
தரணி மலர்ந்ததே..

முயற்சியின் அறுவடை
முழுமைப் பயனாய்
திறனின் மகிமை
திருப்பம் பலதாய்
ஏணியெனவும் ஏற்றம்
தொழில் நுட்ப உலகில்
தொலைவான மகிழ்வு
அருகே வருதலும்
மாற்றத்தின் ஒளியாய்
வேண்டும் பலனை
தருவதே சிறப்பாம்!!
சிவதர்சனி இராகவன்
15/1/2026

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading