“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மாற்றம் ஒன்றே..

வியாழன் கவி 2117
சிவதர்சனி 6/3/2025
மாற்றம் ஒன்றே ..

மனமே தினமும் மாற்றம்
ஒன்றே காண் யாதென
கணமும் அதன் வேகம்
அறிவாய் தீயில் அதீதமாய்..

விஞ்ஞானம் விஞ்சிடும்
அதில் அறிவாய் நிதம்
வினையாகும் செயல்
புரிவாய் சிலையென ஆவாய்..

பாமுகப் பக்கம் விழி காண்
அற்புதம் அதன் வடிவம்
சொற்பமே நம் வாழ்வாம்
சொரியும் அழகு விம்பம்…

முயல்கிற மனங்களில்
முனைப்புகள் தினம் தினம்
விரல்களில் விளையாடு
உரமொடு எடுத்தாளுவாய்..

தனித்தனிப் பகுதியாய்
கனிவது கணினி உருவாக்கம்
படைப்போர் திறனைப்
பாருக்கே அருளுதல் நிகழ்வாய்..

ஆலமர வித்தாய் இவை
அழகுற ஊன்றியவர் திறமை
அழகிய வடிவமைப்பு தரும்
மாற்றம் ஒன்றே மாற்றமாகும்..

Nada Mohan
Author: Nada Mohan