இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மாற்றம் ஒன்றே..

வியாழன் கவி 2117
சிவதர்சனி 6/3/2025
மாற்றம் ஒன்றே ..

மனமே தினமும் மாற்றம்
ஒன்றே காண் யாதென
கணமும் அதன் வேகம்
அறிவாய் தீயில் அதீதமாய்..

விஞ்ஞானம் விஞ்சிடும்
அதில் அறிவாய் நிதம்
வினையாகும் செயல்
புரிவாய் சிலையென ஆவாய்..

பாமுகப் பக்கம் விழி காண்
அற்புதம் அதன் வடிவம்
சொற்பமே நம் வாழ்வாம்
சொரியும் அழகு விம்பம்…

முயல்கிற மனங்களில்
முனைப்புகள் தினம் தினம்
விரல்களில் விளையாடு
உரமொடு எடுத்தாளுவாய்..

தனித்தனிப் பகுதியாய்
கனிவது கணினி உருவாக்கம்
படைப்போர் திறனைப்
பாருக்கே அருளுதல் நிகழ்வாய்..

ஆலமர வித்தாய் இவை
அழகுற ஊன்றியவர் திறமை
அழகிய வடிவமைப்பு தரும்
மாற்றம் ஒன்றே மாற்றமாகும்..

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading