” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றம் ஒன்றே..

வியாழன் கவி 2117
சிவதர்சனி 6/3/2025
மாற்றம் ஒன்றே ..

மனமே தினமும் மாற்றம்
ஒன்றே காண் யாதென
கணமும் அதன் வேகம்
அறிவாய் தீயில் அதீதமாய்..

விஞ்ஞானம் விஞ்சிடும்
அதில் அறிவாய் நிதம்
வினையாகும் செயல்
புரிவாய் சிலையென ஆவாய்..

பாமுகப் பக்கம் விழி காண்
அற்புதம் அதன் வடிவம்
சொற்பமே நம் வாழ்வாம்
சொரியும் அழகு விம்பம்…

முயல்கிற மனங்களில்
முனைப்புகள் தினம் தினம்
விரல்களில் விளையாடு
உரமொடு எடுத்தாளுவாய்..

தனித்தனிப் பகுதியாய்
கனிவது கணினி உருவாக்கம்
படைப்போர் திறனைப்
பாருக்கே அருளுதல் நிகழ்வாய்..

ஆலமர வித்தாய் இவை
அழகுற ஊன்றியவர் திறமை
அழகிய வடிவமைப்பு தரும்
மாற்றம் ஒன்றே மாற்றமாகும்..

Nada Mohan
Author: Nada Mohan