சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

முதல் ஒலியின் அரசன் பகுதி 1

ஜெயம்

காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின் இராச்சியம் என்றால் அவர்தான்
ஒலியின் அரசனான அதிபராம் மோகன்

காலையில் புன்னகை கதிரவனும் விழிக்கும்
இரவின் குரலும் அறிவோடு ஒலிக்கும்
ஒலிவாங்கி இவரது ஏர் எனலாம்
வார்த்தை பசளைகொண்டு மனநிலம் உழுவார்

பேசும் ஒவ்வொரு வரியும் தத்துவம்
சொல்லும் செய்திகளோ சிந்தனையை தூண்டும்
ஒலி உலகில் இவர்தான் ராஜா
கேட்பவரின் இதயம் இவர் அரியாசனம்

வானொலி என்றால் குரல் மட்டுமா
அதுவொரு உயிருள்ள உறவைப் போன்றது
இன்று ஒரு சாதாரண நாளல்ல
மனங்களை இணைக்கும் அலைகளின் விழா

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading