சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

முதல் ஒலியின் அரசன் பகுதி 1

ஜெயம்

காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின் இராச்சியம் என்றால் அவர்தான்
ஒலியின் அரசனான அதிபராம் மோகன்

காலையில் புன்னகை கதிரவனும் விழிக்கும்
இரவின் குரலும் அறிவோடு ஒலிக்கும்
ஒலிவாங்கி இவரது ஏர் எனலாம்
வார்த்தை பசளைகொண்டு மனநிலம் உழுவார்

பேசும் ஒவ்வொரு வரியும் தத்துவம்
சொல்லும் செய்திகளோ சிந்தனையை தூண்டும்
ஒலி உலகில் இவர்தான் ராஜா
கேட்பவரின் இதயம் இவர் அரியாசனம்

வானொலி என்றால் குரல் மட்டுமா
அதுவொரு உயிருள்ள உறவைப் போன்றது
இன்று ஒரு சாதாரண நாளல்ல
மனங்களை இணைக்கும் அலைகளின் விழா

Author: