சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

முதல் ஒலி

நகுலா சிவநாதன்
முதல் ஒலி

கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின் நல்லொலி ஆனாய்
நயமாய் கண்ட சண்ரைசின் குரலொலியே

37 வருட முதல் ஒலிநீ பரப்பி
முனைப்பாய் ஒளிர்ந்தாய் முன்னின்று
வனப்பாய் வாழ்வியல் சொல்லி வளர்ந்தாய்
வண்ணமுடன் எண்ண அலை விரித்தாய்

தங்கத்தமிழை சிரமேல் வைத்து
பங்கம் இல்லாப் பாரிலே பவனி வந்தாய்
நெஞ்சத்தில் நிறைந்த ஒலிநீயே
நேரிய கருத்துகள் விதைத்தாய் வாழி! வாழி

ஐரோப்பா கண்ட வண்ணமிகு ஒலி
வரலாறாய் ஆனதே தேன்தமிழாலே
நடா மோகன் குரலிங்கு நயமாய் ஒலிக்க
விடாமல் தொடர்கிறதே
விண்ணொலியாய் என்றும்

நகுலா சிவநாதன் 1829

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading