சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

முதல் ஒலி

ராணி சம்பந்தர்

புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள் மனதில் கொள்ளை
கொண்ட மகிழ்வின் இனிமை

நாளும் பொழுதும் கேட்டிடவே
கேட்க கேட்க வேண்டும் என்ற
ஆவலில் காத்திருந்த குரலில்
தொடங்கிய சண்ரைஸினிலே
கண்ட முதல் ஒலி சாதனையது

நேரம் போவதே தெரியாததும்
சோரம் போகாது உரமானதும்
கரங்கோத்த அனைவர் பணி
என்றென்றும் மனங் குளிரப்
போற்றிடுமே பெருமையது

இன்று போல் இன்னும் பல
ஆண்டு சேவை தொடரவே
வாழும் காலம் என்றுமே
வாழ்க நீர் வாழ்க என்றே
வாழ்த்துகள் கூறிடுவோமே .

Author: