முதல் ஒலி

ராணி சம்பந்தர்

புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள் மனதில் கொள்ளை
கொண்ட மகிழ்வின் இனிமை

நாளும் பொழுதும் கேட்டிடவே
கேட்க கேட்க வேண்டும் என்ற
ஆவலில் காத்திருந்த குரலில்
தொடங்கிய சண்ரைஸினிலே
கண்ட முதல் ஒலி சாதனையது

நேரம் போவதே தெரியாததும்
சோரம் போகாது உரமானதும்
கரங்கோத்த அனைவர் பணி
என்றென்றும் மனங் குளிரப்
போற்றிடுமே பெருமையது

இன்று போல் இன்னும் பல
ஆண்டு சேவை தொடரவே
வாழும் காலம் என்றுமே
வாழ்க நீர் வாழ்க என்றே
வாழ்த்துகள் கூறிடுவோமே .

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading