மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

முதல் ஒலி

ராணி சம்பந்தர்

புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள் மனதில் கொள்ளை
கொண்ட மகிழ்வின் இனிமை

நாளும் பொழுதும் கேட்டிடவே
கேட்க கேட்க வேண்டும் என்ற
ஆவலில் காத்திருந்த குரலில்
தொடங்கிய சண்ரைஸினிலே
கண்ட முதல் ஒலி சாதனையது

நேரம் போவதே தெரியாததும்
சோரம் போகாது உரமானதும்
கரங்கோத்த அனைவர் பணி
என்றென்றும் மனங் குளிரப்
போற்றிடுமே பெருமையது

இன்று போல் இன்னும் பல
ஆண்டு சேவை தொடரவே
வாழும் காலம் என்றுமே
வாழ்க நீர் வாழ்க என்றே
வாழ்த்துகள் கூறிடுவோமே .

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading