முள்ளிவாய்க்காலில் நடந்தது

கெங்கா ஸ்ரான்லி

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன
முடக்கிய செய்திகள் சொல்வது என்ன
மக்களின் நிலைமை அறிந்தவர் எவரோ
உதவிகள் செய்ய முனைந்தவர் யாரோ
அவலக்குரல்கள அழுதிடும் சத்தம்
அண்டமே பிளக்கும்
கவலைகள் சூழ்ந்த களம்அங்குதானே
கண்டவர் யாரோ கூறிடுவாரோ
பெரியவர் குழந்தை பெண்கள் ஆண்கள்
போற்றிய மண்ணில் குவிந்தன உடல்கள்்
பீரங்கி வெடிக்க பிணங்களாய் மக்கள்
பீதியில் நடுங்கி பிரிந்தது உயிரே
எங்கும் சொல்ல கொடுமையின் கதையை
என்ன தான் செய்ய முடிந்த எம்கதையை
முடியாது மறக்க என்றென்றும் எம்மனதில்
வடுவான காயம் முள்ளிவாய்க்காலில் நடந்தவை!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading