மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட

சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்

எள்ளென்றால் எண்ணை ஆகாது தம்பி

ஏற்றத்தை உயர்வாக்கி ஏமாறாது நடப்பாய்

தெள்ளத்தெளிவு உன்னிடம் வேண்டும் பாராய்

கள்ளம் வேண்டாம் கடமை வேண்டும்

உரிமை என்று உழறித் திரியாது

உருக்குலைந்து அலைமேவும் குமிழியும் ஆகாதே

பிறருக்காக வாழ்வது வாழ்வென அலையாதே

பிரயோசனம் இன்றிப் பொழுதைக் கழிக்காதே

மெல்லென மழைத்துளி மண்ணை நனைப்பதற்கல்ல

இயற்கை என்பதை அழியாமல் காப்பதே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading